hello madras mobile banner 1200x300

மு.க.ஸ்டாலினை “ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்”அமைப்பினர் சந்தித்தனர்.

மு.க.ஸ்டாலினை இன்று (12.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில்,

இலங்கைத் தீவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டு மற்றும் தமிழர் தாயகக் கோட்பாடையே சிதைக்கும் இனஅழிப்பின் சாட்சியங்களாக தீவின் ஈழத்தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களான ஈழத்தின் திருகோணமலை மாவட்ட சாந்தமலர் அந்தோனிஜோன்சன், மட்டக்களப்பு மாவட்ட லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாசி, அம்பாறை மாவட்ட சிந்துஜா சௌயன், முல்லைத்தீவு மாவட்ட ஜெகதாம்பிகை விக்கினேஸ்வரன், வவுனியா மாவட்ட சரோஜா குகநேசதாசன், மன்னார் மாவட்ட பற்றீசியா அலெக்ஸ், கிளிநொச்சி மாவட்ட வன்செலீன் கந்தசாமி, சுபதர்சினி சச்சிதானந்தம், யாழ்ப்பாண மாவட்ட ஜமுனா சந்திரகுமார், விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகிய பத்து பெண்கள் அடங்கிய “ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்” அமைப்பினர் நேரில் சந்தித்து ஏற்கனவே இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் பெரும் அர்ப்பணிப்போடு இயங்கிய தமிழகத் தொப்புட்கொடி உறவுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »