hello madras mobile banner 1200x300

100% இலக்கை அடைய மாபெரும் தடுப்பூசி முகாம்!

வருஷநாடு – சிங்கராஜபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத நபர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியில் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டிருந்தனர். சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »