நிறுவனத்தின் பண்டிகை கால இருப்பை விரிவுபடுத்தும் வகையில், சில்லறை விற்பனை, குடியிருப்பு
பகுதிகள், பந்தல்கள் மற்றும் பயணத்தின்போதான தொடர்பு மையங்களில் ஒருங்கிணைக்கப்படும் Coca-Cola-வின் வலிமையான போர்ட்ஃபோலியோ
CHENNAI செப்டம்பர் 18, 2026: இந்த பண்டிகை காலத்தில், Coca-Cola India தனது பல்வேறு
வகையான பானங்களின் போர்ட்ஃபோலியோவை நுகர்வோருக்கு நெருக்கமாக கொண்டு வந்து,
அவர்களின் பண்டிகை அனுபவத்தை வடிவமைக்கும் தருணங்களில் புத்துணர்ச்சியையும்
நீரேற்றத்தையும் (hydration) வழங்குகிறது. மகாராஷ்டிரா மற்றும் பிற பிராந்தியங்களில் தனது
இருப்பை விரிவுபடுத்தி, நிறுவனம் நேரடியாக துடிப்பான பந்தல்கள், குடியிருப்பு சங்கங்கள் (housing
societies) மற்றும் ஆன்-தி-கோ ஹாட்ஸ்பாட்களுக்கு தனித்துவமான பிராண்ட் அனுபவங்களை
கொண்டு சென்று உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. எண்ணற்ற உள்ளூர்
கடைகளில் தங்களுக்குப் பிடித்த பானங்கள் எளிதாகக் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம், Coca-
Cola நண்பர்களும் குடும்பத்தினரும் பண்டிகைகளின் போது மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து
கொள்வதை மேலும் எளிதாக்குகிறது.
Maaza Society Anandotsav மூலம் Maaza பிராந்தியத்தில் உள்ள பல குடியிருப்பு சங்கங்களுக்கு ஒரு
தனித்துவமான சமூக அனுபவத்தைக் கொண்டு வரும். வெற்றி பெறும் குடியிருப்பு பகுதிகளுக்கு
உற்சாகமான பரிசுகளும், பிராண்ட் தூதர்களான Riteish மற்றும் Genelia-வை சந்திக்கும் சிறப்பு
வாய்ப்பும் கிடைக்கும்.
மக்களுக்கு நேரடியாகவே புத்துணர்ச்சியைக் கொண்டு சேர்க்கும் வகையில், ‘கோக் ஆன் வீல்ஸ்’
பரபரப்பான பண்டிகை கூடங்களிலும் மற்றும் நெரிசலான போக்குவரத்து வழிகளில் நுகர்வோருக்கு
குளிர்ந்த பானங்களை வழங்கும். அன்றாட பண்டிகை உணவு அனுபவத்தை மேலும் சிறப்பிக்கும்
வகையில், Coca-Cola பிரபல உள்ளூர் உணவகங்கள் மற்றும் உணவு மையங்களுடன் இணைந்து
சிறப்பு மீல் காம்போக்களை வழங்குகிறது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்களுக்குப் பிடித்த
பண்டிகை உணவுகளுடன் “கோக்குடன் ஆஹா” தருணத்தைப் பகிர்ந்து கொள்வதை எப்போதும் விட
எளிதாக்கும் வகையில் இந்த உணவு சேர்க்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
prite X Spicy Pandal Trail மூலம் பண்டிகைகளின் போது நுகர்வோரின் பயணத்தில் பிராண்டை
ஒருங்கிணைத்து, Sprite தனது Sprite X Spicy அனுபவத்தை பந்தல்களுக்குக் கொண்டு வரும். இது
நுகர்வோரை பல பந்தல்களை பார்வையிடவும், காரமான உணவு சவால்களை எதிர்கொள்ளவும்
அழைக்கிறது. Sprite X Spicy Stamp Book மூலம் அவர்கள் இந்த சவால்களை நிறைவு செய்து
பயணத்தை மேற்கொள்ளும் போது ஸ்டாம்புகளை சேகரிக்கலாம் மற்றும் பிரத்யேக Sprite
மெர்ச்சன்டைஸ்களைப் பெறலாம். மூன்று ஸ்டாம்புகளைச் சேகரிக்கும் நுகர்வோர், கொரியாவுக்கான
சுற்றுப்பயணத்தை வெல்லும் அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள், இது
பண்டிகை உணவுப் பயணத்திற்கு கூடுதல் உற்சாகத்தைச் சேர்க்கிறது.
Kinley, பண்டிகை காலத்தில் நகரத்தை இயங்க வைப்பவர்களுக்கான நீரேற்றத்தில் (hydration) தனது
கவனத்தை விரிவுபடுத்தும். இதன் மூலம் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர்கள் சாலையில்
நீண்ட நேரம் பணிபுரியும் போது அவர்களுக்கு நீரேற்றம் கிடைப்பதை உறுதி செய்யும். இந்த
அக்கறையுள்ள முயற்சியின் தொடர்ச்சியாக, இந்த பிராண்ட் போக்குவரத்துக் காவலர்கள் மற்றும்
அவர்களின் குடும்பங்களை ஒன்றுதிரட்டி ஒரு சிறப்பு பண்டிகைக் கொண்டாட்டத்தை நடத்தும், இது
பாரம்பரிய அனுபவங்களைக் கொண்ட ஒரு பிரத்யேக சர்ப்ரைஸ் பந்தலுடன் நிறைவடையும். இந்த
பண்டிகை மனநிலை Kinley-வின் பேக்கேஜிங்கிற்கும் நீட்டிக்கப்படும், சிறப்பு பண்டிகை லேபிள்கள்
பிராண்டின் இருப்பிற்கு ஒரு கொண்டாட்டத் தொடுதலை சேர்க்கும்.
Minute Maid தனது புத்துணர்ச்சியூட்டும் பழ பானங்களின் வரம்பை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள
பந்தல் ஹாட்ஸ்பாட்களில் ஆன்-தி-கோ சாம்பிளிங் மூலம் பண்டிகைகளின் போது நுகர்வோருக்கு
நெருக்கமாக கொண்டு வரும். இந்த முயற்சி நுகர்வோருக்கு Nimbu Fresh, Mixed Fruit மற்றும் Apple
உள்ளிட்ட தங்களுக்குப் பிடித்தமான பானங்களை சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பை வழங்கும். இது
பண்டிகை காலத்தில் பரந்த அளவிலான மக்களைச் சென்றடைவதுடன் அவர்களின்
கொண்டாட்டங்களுக்கு வசதியான ஒரு புத்துணர்ச்சி விருப்பத்தையும் சேர்க்கும்.
Coca-Cola India மற்றும் தென்மேற்கு ஆசியாவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் கிரீஷ்மா சிங்
அவர்கள், “பண்டிகைகள் என்பது குடும்பங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து, பாரம்பரியங்களைக்
கொண்டாடி, சிறப்பு உணவுகளை அனுபவித்து, மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நேரமாகும்.
எங்களின் பல்வேறு வகையான பானங்களின் போர்ட்ஃபோலியோ மூலம், மகாராஷ்டிரா மற்றும் பிற
பிராந்தியங்களில் இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருப்பதிலும், மக்களை
ஒன்றிணைக்கும் தருணங்களில் புத்துணர்ச்சியையும் தனித்துவமான அனுபவங்களையும் கொண்டு
சேர்ப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குடியிருப்பு பகுதிகளின் கொண்டாட்டங்கள் மற்றும்
பண்டிகைப் பந்தல்கள் முதல் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உணவுகள் மற்றும் ஆன்-தி-கோ
தருணங்கள் வரை, மக்கள் கொண்டாடும் பல்வேறு வழிகளுக்குத் துணையாகவும், இந்த பருவத்தின்
மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும் வகையிலும் எங்கள் போர்ட்ஃபோலியோ
வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டம் பண்டிகை காலத்தில் பல்வேறு தருணங்களில் Coca-Cola India-வின்
போர்ட்ஃபோலியோவை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதுடன், மகாராஷ்டிரா மற்றும் பிற
மாநிலங்களில் பானங்கள் கிடைப்பதை வலுப்படுத்தும். குடியிருப்பு பகுதிகள், ரீடெய்ல் கடைகள்,
உணவு மையங்கள், பந்தல்கள் மற்றும் ஆன்-தி-கோ பகுதிகள் ஆகிய இடங்களில் இயக்கப்படும்
செயல்பாடுகளுடன், இந்த முயற்சி பண்டிகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக பல பிராண்டுகளையும்
நுகர்வோர் தருணங்களையும் ஒன்றிணைக்கிறது.
