hello madras mobile banner 1200x300

4 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகன விற்பனையை எட்டிய மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் ! இந்த மைல்கல் சாதனையை அடைந்த இந்தியாவின் முதல் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனம்!

சென்னை 20 ஆகஸ்ட் 2026:ஒவ்வொரு மூன்று சக்கர வாகனம் மற்றும் சிறிய வர்த்தக வாகனத்திற்கு பின்னாலும் ஒரு வாழ்வாதாரம் உள்ளது — ஒரு ஓட்டுநர், ஒரு கடைக்காரர், ஒரு டெலிவரி பார்ட்னர் அல்லது ஒரு சிறு தொழிலதிபர். இன்று, அத்தகைய 4 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பயணங்கள் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டா எலக்ட்ரிக் வாகனங்களில் இயங்குகின்றன. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட், ஒட்டுமொத்தமாக 4 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையை கடந்து, நாட்டின் மின்சார வாகன பயன்பாட்டு மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதுடன், இந்த சாதனையை படைத்த இந்தியாவின் முதல் வர்த்தக மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையையும் பெறுகிறது.

இந்த மைல்கல், தங்கள் வருமானம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மஹிந்திரா வணிக மின்சார வாகனங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எம்.எல்.எம்.எம்.எல் (MLMML) நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு ஒரு எளிய நம்பிக்கையே காரணம்: பொருளாதார ரீதியாக பயனளிக்கும் போது மட்டுமே வாடிக்கையாளர்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவார்கள். வெறும் சுற்றுச்சூழல் தீர்வாக மட்டும் முன்வைக்காமல், வாடிக்கையாளர்களின் தினசரி வருமானத்தையும் தொழில்முறை வளர்ச்சியையும் உயர்த்தும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தியது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான நன்மைகளும் இயற்கையாகவே தொடர்ந்து கிடைத்துள்ளன.

மஹிந்திரா மின்சார வாகனங்கள் (யுடிஓ (UDO), ட்ரியோ (Treo) வரம்பு, ஜோர் கிராண்ட் (Zor Grand), ஜிஇஓ (ZEO) மற்றும் இ-ஆல்ஃபா (e-Alfa) உட்பட) ஒட்டுமொத்தமாக 900 கோடிக்கும் அதிகமான (9 பில்லியன்) கிலோமீட்டர்கள் பயணிக்கப்பட்டு, தோராயமாக 1,85,000 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைத் தடுக்க உதவியுள்ளன – இது 83 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு சமமாகும்.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகள், கூட்டாண்மைகள், நிதி உதவி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றிலான முதலீடுகளின் பலத்தால், 2031-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மின்சார வாகனங்களைச் சாலையில் இயக்க எம்.எல்.எம்.எம்.எல் நிறுவனம் இலக்கு கொண்டு உழைத்து வருகிறது.

மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி சுமன் மிஸ்ரா கூறுகையில், “4 லட்சம் என்பது எங்களுக்கு ஒரு வெறும் எண் அல்ல — அது ஒவ்வொரு நாளும் நாங்கள் மேம்படுத்த உதவிய 4 லட்சம் மனிதர்களின் வாழ்வாதாரம் ஆகும். இந்த மைல்கல் சாதனை, மின்சார வாகனங்களைத் தேர்வுசெய்த ஓட்டுநர்களுக்கும் தொழில்முனைவோருக்கும், மற்றும் இந்தியாவின் கடைசி மைல் பொருளாதாரத்திற்கு மின்சார வாகனப் பயன்பாட்டை ஒரு நடைமுறைத் தேர்வாக மாற்றிய கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்குமே உரித்தானது. மஹிந்திராவில், எங்கள் கவனம் தெளிவாக உள்ளது: சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது, இந்தச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு கடைசி மைல் வாடிக்கையாளருக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதில் கிடைக்கச் செய்வதுதான்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »