hello madras mobile banner 1200x300

தென் தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது……

கன்னியாகுமரி – கடந்த அ தி மு க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மாவட்ட கழக செயலாளர்  என்_சுரேஷ்ராஜனின் சீரிய முயற்சியால் மீண்டும் பேருந்து இயக்கம் துவக்கம்.

மாவட்ட கழக செயலாளர்  என்.சுரேஷ்ராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தபோது ஒன்றிய செயலாளர் அண்ணன் .என்_தாமரைபாரதி முயற்சியால் தென்தாமரை குளத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்களின் வசதிக்காக கிராமங்களை இணைத்து நாகர்கோவிலுக்கு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் பேருந்து போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தப்பட்டது. மீண்டும் 2G வழித்தடம் கொண்ட பேருந்தை வழித்தில் இயக்க வேண்டுமென தென்தாமரை குளத்தில் நடந்த பேரூர் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றியக் கழகச் செயலாளருமான என்.தாமரைபாரதி வழியாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் தென்தாமாரைகுளத்தில் இருந்து   2G பேருந்து இயக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றிய கழகச் செயலாளருமான . என்_தாமரைபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான . என்_சுரேஷ்ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் . பூவியூர்காமராஜ், முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் துரைலிங்கம், சிஎஸ்ஐ சேகர கஸ்பா சபை திருப்பணியாளர் அருள்சீலன், செயலாளர் .கிறிஸ்பின் இன்ப கால்வின், கிறிஸ்து சபை செயலாளர் . ஜான்சன் பால் டேனியல், ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் . எட்வின் ராஜ், மாவட்ட பிரதிநிதி . ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் .மதியழகன், மாவட்ட துணை செயலாளர் . முத்துசாமி, முன்னாள் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் வக்கீல் பால ஜனாதிபதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் . பார்த்தசாரதி, பேராசிரியர் டி.சி.மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் . சாய்ராம், பொதுக்குழு உறுப்பினர் . ஷேக் தாவூத், பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர். சுதன்மணி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அழகேசன், கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் . கிருஷ்ணகுமார், வக்கீல் . ஜனாயுகேந்த், ஒன்றிய கவுன்சிலர் .பிரேமலதா, குலசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் . சுடலையாண்டி, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் . பொன் ஜான்சன்,  தமிழ்மாறன்,  ஜெனித்பாபு, துணை அமைப்பாளர்கள் . ஜோனி மோசஸ்,  ஆல்வின், பிரதீப்,  நாகமணி, ஒன்றிய பிரதிநிதிகள் திரு ஜான் கிரிஸ்டோபர்,  நிஷார்,  செல்வஷேம், நிர்வாகிகள்  ஸ்டூவர்ட்,  ராஜாராம்,  செல்வகுமார்,  அரிகிருஷ்ணபெருமாள்,சுந்தரம் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »