cropped tmk hmm logo

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசணை கூட்டம்…

செங்கல்பட்டு – செங்கல்பட்டு கிழக்கு, மேற்குமாவட்டங்களின் அதிமுக சார்பிலான உள்ளாட்சி தேர்தல் ஆலோசணைக் கூட்டம் மாமண்டூர் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுகின்ற நிர்வாகிகளுக்கான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் ம.தனபால் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வி.வேலாயுதம் வரவேற்றார். மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.சீனிவாசன், எ.எஸ்.வந்தராவ், மாவட்ட அம்மா பேரவை செயலர் ஆனூர் பக்தவசலம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.பிரசாத், மாவட்ட மாணவரணி தலைவர்டி.பாலமுருகன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  செய்யூர் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலர்கள் திருக்கழுகுன்றம்எஸ்.ஆறுமுகம். சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர்கள் டி.கே.எம். சின்னையா,தங்கமணி,நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ கே.மரகதம் குமரவேல், மற்றும் முன்னால் எம்எல்ஏகள் வாசுதேவன்,தண்டரை கே. மனோகரன்,கணிதாசம்பத், பூவராகமூர்த்தி,  தன்சிங் மற்றும் முன்னால்
எம்.பி கே.என்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் மதுராந்தகம் கோ.அப்பாதுரை, சித்தாமூர் கிருஷ்ணமூர்த்தி,வேங்கடமங்கலம் எம்.கஜா (எ) கஜேந்திரன், மேலமையூர் இ.சம்பத்குமார்,தையூர் எஸ் குமரவேல், முதுகரை கார்த்திகேயன், பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், செட்டிபுண்ணியம் சி.ஆர். குணசேகரன் ,திருக்கழுக்குன்றம் கே.ஆர். செல்வம், மாமல்லபுரம் ஜி.ராகவன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் இடைக்கழிநாடு டி.ஆறுமுகம்,திருக்கழுக்குன்றம் எம்.தினேஷ்குமார்மற்றும் மாவட்ட பிரதிநிதி மருத்துவர் கெ.ஷக்கிர்பாஷா, ஊராட்சி கழக செயலாளர் வில்லியம்பாக்கம் த.குமரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணிவாக்கம் சாந்தி புருஷோத்தமன், பாலூர் வழக்கறிஞர் எஸ்.ஏ.சுதேஷ் ஆனந்த் மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மகளீரணி நிர்வாகிகள், தொழிற்சங்கநிர்வாகிகள் உள்பட பலர் கலந்துக் கொண்டடனர்.


இக் கூட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சிதேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும்வெற்றி பெற முழு மூச்சுடன்பாடுபட வேண்டும். ஒற்றுமையுடன், கட்டுக்கோப்புடன் அனைவரும் பாடுபடவேண்டும்.பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றியை பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பபட்டது மற்றும் இறுதியாக செங்கல்பட்டு நகர செயலாளர் வி.செந்தில்குமார் நன்றி உரை கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »