hello madras mobile banner 1200x300

டாடா மோட்டார்ஸ் மகாராஷ்டிரா அரசுடன் கைகோர்த்து, வாகன ஸ்கிராப்பிங் வசதியை அமைப்பதற்கு ஆதரவளிக்கிறது

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இன்று மகாராஷ்டிராவில் ஒரு பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் அமைவிடத்தை (RVSF) உருவாக்கும் நோக்கில், மகாராஷ்டிர  அரசின் தொழில்துறை, எரிசக்தி மற்றும் தொழிலாளர் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த மாநாட்டில், இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் பிற பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முன்மொழியப்பட்ட ஸ்கிராப்பேஜ் மையம் ஆண்டுக்கு 35,000 வாகனங்களை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

தொழில்துறை, எரிசக்தி மற்றும் தொழிலாளர் துறை, மகாராஷ்டிரா மாநில அரசின் விதிகள் மற்றும் வரையறைகளின்படி தேவையான அனுமதிகளை எளிதாக்குவதற்கும், RVSF அமைப்பதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) வெளியிடப்பட்ட வரைவு வாகன ஸ்கிராப்புக் கொள்கைக்கும் உதவும். ஸ்கிராப் மற்றும் கச்சா எண்ணெய்க்கான குறைந்த இறக்குமதி பில், MSMEகளுக்கான வேலை வாய்ப்புகள், OEMகளுக்கான புதிய வாகன விற்பனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் வாய்ப்புகள், வாகன உரிமையாளர்களுக்கான குறைந்த செயல்பாட்டு செலவு, நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான வாகனங்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களின் நோக்கத்தையும் இது ஈடேற்றும் மற்றும் அனைவருக்கும் நிலையான சூழலை அமைக்க உதவும். டாடா மோட்டார்ஸ் ஒரு கூட்டாளருடன் இணைந்து ஸ்கிராப்பிங் மையத்தை அமைக்கும். டாடா மோட்டார்ஸ் இதற்கு முன்பு குஜராத் அரசுடன் அகமதாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் அமைவிடத்தை (RVSF) அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை ஆதரிப்பதற்கான கூடுதல் முயற்சிகளுக்கு மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.

இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. கிரிஷ் வாக் அவர்கள், “மகாராஷ்டிராவில் ஒரு ஸ்கிராப்பிங் அமைவிடத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பொருத்தமான வாகன ஸ்கிராப்பிங் வழங்கும் நன்கு அறியப்பட்ட பிற நன்மைகளைத் தவிர – ஒரு வட்டப் பொருளாதாரத்தின் அமைப்பை மேம்படுத்துதலுக்கும், நிலையான இயக்கம் மீதான நமது தலைமைத்துவ நிலையை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் இந்த முயற்சி உதவும். நாடு முழுவதும் ஸ்கிராப்பிங் வசதிகளை அமைக்கும் இந்த முயற்சியில் கொள்கை வகுப்பாளர்களுடன் கூட்டு சேர்வதில் பெருமிதம் கொள்கிறோம். இது ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மற்றும் இந்தியாவின் போக்குவரத்துத் துறையின் சரியான திசையில் மற்றொரு முக்கியமான படியாகும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »