cropped tmk hmm logo

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு, கடந்த 25.07.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், காவல் குழுவினர் விசாரணை செய்தனர்.

மேலும், W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் எதிரி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரிய வந்தது.

அதன் பேரில், W-18 எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முகமது சலீம், வ/56 என்பவரை கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட முகமது சலீம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »